Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (10:24 IST)
இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமார் 8 மீ அளவுக்கு அலைகள் மேலெழும்பி தாக்கியதாக சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சுனாமியால் பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 291 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாட்டில் இருந்து வந்த பயனிகள் பலரையும் காணவில்லை, எனவும் அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய பேரிடர் மேலாணமைக்  குழு ‘சுனாமியில் பலியானோர் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது, 850-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், சுனாமி தாக்கியப் பலப் பகுதிகளுக்கு மீட்புப்படையினர் செல்ல முடியவில்லை அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மேலும் பல நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து சேதமாகியுள்ளன‘ என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

எங்களோட அந்த மாடல் Bike-ஐ ஓட்டாதீங்க? பைக்குகளை அவசரமாக திரும்ப பெறும் Kawasaki! - என்ன நடந்தது?

தெரு நாய்களை கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி.. தமிழகத்திலும் நடக்குமா?

த.வெ.க செயலி தயார்! உறுப்பினர் இணைப்பு தொடக்கம்! - விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சனாதன கருத்தியலை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல்.. கமல்ஹாசன் சந்திப்புக்கு பின் திருமாவளவன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments