Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரிழந்த குழந்தை இறுதி சடங்கின்போது உயிர் பெற்ற அதிசயம்

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (12:05 IST)
சீனாவில்  உயிரிழந்த குழந்தை ஒன்று மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்தது.


 


சீனாவில் ஷைஜியங் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்ததால் அக்குழந்தையை இன்குபெட்டரில் வைத்து கடந்த 23 நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து குழந்தையை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வீட்டிற்கு சென்றது குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். குழந்தைக்க்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால்  இதய துடிப்பு நின்றதால் அக்குழந்தை இறந்து விட்டது. இதையடுத்து அக்குழந்தையின் உடல் துணிகளால் சுற்றப்பட்டு மருத்துவமனையில் உள்ள பிண அறையில் சுமார் 15 மணி நேரம் வைத்திருந்தனர்.

பின்னர் குழந்தையின் உடலை புதைப்பதற்கு முன்பு  பெற்றோர்கள் இறுதி சடங்குகளில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையின் உடலில் அசைவு தெரிந்தது. மேலும் அக்குழந்தை முணங்கியது. இதனைக் கண்டு  அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை மீண்டும் உயிர் பிழைத்ததாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments