Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுவேலை செய்ய சொன்ன தந்தையை கொலை செய்த 3 சகோதரிகள்

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2018 (11:17 IST)
ரஷ்யாவில் தந்தை ஒருவரை அவரது 3 மகள்களே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மாஸ்கோ நகரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகள்களுடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் ஆல்பர்ட் தனது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆல்பர்ட்டின் உடலை கைப்பற்றிய போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
அவரது மகள்களை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர்கள் தந்தை ஆல்பர்ட் எந்நேரமும் எங்களை படிக்க விடாமல் வீட்டு வேலையை செய்ய வற்புறுத்தினார். ஆகவே தான் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தோம் என தெரிவித்தனர்.
 
இதனையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments