Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுவேலை செய்ய சொன்ன தந்தையை கொலை செய்த 3 சகோதரிகள்

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2018 (11:17 IST)
ரஷ்யாவில் தந்தை ஒருவரை அவரது 3 மகள்களே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மாஸ்கோ நகரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகள்களுடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் ஆல்பர்ட் தனது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆல்பர்ட்டின் உடலை கைப்பற்றிய போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
அவரது மகள்களை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர்கள் தந்தை ஆல்பர்ட் எந்நேரமும் எங்களை படிக்க விடாமல் வீட்டு வேலையை செய்ய வற்புறுத்தினார். ஆகவே தான் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தோம் என தெரிவித்தனர்.
 
இதனையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments