Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (22:21 IST)
சிக்கன நடவடிக்கை காரணமாக 18000 பேரை பணி நீக்கம் செய்ய காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது மெர்சிடஸ்-பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் டைம்லர் என்ற நிறுவனமும் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
உலகம் முழுவதும்  ஜெர்மனியின் டைம்லர் நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிந்து வரும் நிலையில் வரும் 2022ம் ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது
 
ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மூலம் ஆகும் செலவில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை குறைக்கவும், எதிர்காலத்துக்கு நவீன கார்களை உருவாக்க முதலீடு செய்யவும் ஊழியர்களை குறைக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது
 
இதனையடுத்து முன்கூட்டியே ஓய்வு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விரைவில் இந்நிறுவனம் அறிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments