Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரண்டியால் மகனின் கண்களை நோண்டி எடுத்த தந்தை

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (09:20 IST)
மகன் காதலித்த ஆத்திரத்தில், அவரது தந்தை மகனின் கண்களை கரண்டியால் நோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நசீராபாத் பகுதியை சேர்ந்தவர் தோஸ்த் முகமது (70), இவரது மகன் அப்துல் பாகி (22). அப்துல் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
 
இந்நிலையில் அப்துல் தன்னுடன் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்த விஷயம் அப்துலின் பெற்றோருக்கு தெரியவந்தது.
 
இதனையடுத்து அப்துலின் தந்தையும்,  4 சகோதரர்களும், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்துல் தான் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஒற்றை காலில் நின்றுள்ளார்.
 
இதனால் படுகோபமடைந்த அப்துலின் தந்தையும் 4 சகோதரர்களும், அப்துலை கட்டிப்போட்டு அவரது, கண்களை கரண்டியால் தோண்டி எடுத்தனர். 
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அப்துலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொடூர செயலை செய்த அப்துலின் தந்தையையும், 4 சகோதரர்களும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments