தென் கொரியாவில் எகிறும் கொரோனா பாதிப்பு!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (11:33 IST)
தென் கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது என தகவல் வெயாகியுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59.76  கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் கொரோனாவை வென்று விட்டோம் என சமீபத்தில் குறிப்பிட்ட நிலையில் தென் கொரியாவில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,80,803 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 84,128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. மேலும், தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் உயிரிழப்பு குறைந்துள்ளது என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments