Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றம் உத்தரவையடுத்து கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தில் சோதனை

Webdunia
சனி, 24 மார்ச் 2018 (11:39 IST)
லண்டன் நீதிமன்றம் உத்தரவையடுத்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 
 
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் அமெரிக்காவில் வசிக்கும் 50 மில்லியின் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடி, டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தியதாக லண்டனில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் தலைமை அலுவலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
 
இது குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அளித்த பேட்டியில், பேஸ்புக் பயணாளிகளின் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான் என தெரிவித்தார். இதனால் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடிய புகாரில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தை லண்டன் தகவல் ஆணையர் விசாரித்து வந்தார்.
 
இந்நிலையில், லண்டன் நீதிமன்றம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தை சோதனையிட உத்தரவிட்டது. இதனையடுத்து, லண்டன் தகவல் ஆணையர் தலைமையில் அமலாக்கபிரிவினர் அங்கு சோதனையில் ஈடுபட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments