Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நாட்டு மக்களுக்கு தடை விதித்து பல்பு வாங்கிய டிரம்ப்...

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (10:54 IST)
ஆறு நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நுழையக்கூடாது என அமெரிக்க அதிபர் விதித்த தடைக்கு, நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


 

 
ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய ஆறு முஸ்லீம் நாடுகளை சேர்ந்த பயணிகள் மற்றும் வெனிசுலாவை சேர்ந்த சில குறிப்பிட்ட அதிகாரிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நுழைவதற்கு சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.
 
ஆனால், பிறநாட்டு பயணிகள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி ஒருவர் ஹவாய் மாகாணத்தின் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, டிரம்பின் கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
 
குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த 15 கோடி பேர் அமெரிக்க வருவதால், பாதுகாப்பிற்கு தீங்கு ஏற்படும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. முஸ்லீம்களை குறிவைத்து எதிர்ப்பது, மத சுதந்திரத்தை பாதுகாக்கும் அமெரிக்க அரசியல் அமைப்பு சட்ட விதிகளை மீறும் செயல் என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments