Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போக்கிமோன் கோ விளையாட குழந்தையை தவிக்கவிட்டுச் சென்ற தம்பதி கைது

போக்கிமோன் கோ விளையாட குழந்தையை தவிக்கவிட்டுச் சென்ற தம்பதி கைது

போக்கிமோன் கோ விளையாட குழந்தையை தவிக்கவிட்டுச் சென்ற தம்பதி கைது
, புதன், 3 ஆகஸ்ட் 2016 (11:16 IST)
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சான் டான் பள்ளத்தாக்கை சேர்ந்த ப்ரெண்ட் டாலே (27), மற்றும் சாண்ராவின் டாலே (25), தங்களது 2 வயது மகனை, வீட்டில் இரவு 10.30 மணிக்கு வெப்பம் மிகுந்த சூழ்நிலையில் 90 நிமிடங்கள் தண்ணீர் இல்லாமல் தனியாக விட்டுவிட்டு, போக்கிமோன் கோ விளையாடுவதற்காக காரில் சென்றுவிட்டனர். 



பின்னர், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு வீட்டை விட்டு வெளியே வர முய
பின்னர், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு வீட்டை விட்டு வெளியே வர முயற்சித்துள்ளது. இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை அடுத்து காவல்துறையினர் குழந்தையை மீட்டு, பெற்றோரை கைது செய்தனர்.ற்சித்து

கண்ணெதிரே காணும் உலகை கைபேசியில் அதேமாதிரி காட்டி, கண்ணுக்கு தென்படாத உருவங்களை கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ‘போக்கிமோன் கோ’ வீடியோ கேம், உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக மாறியுள்ளது. பல இடங்களுக்கு சென்றால் மட்டுமே இந்த விளையாட்டை விளையாட முடியும்.  இதனால், பல சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.ள்ள

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதியை விட கொடூரமாக கொல்லப்பட்ட கலைச்செல்வி: ஆதிக்க சாதியின் வெறிச்செயல்