Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் மக்கள் போராட்டம்; ஊரடங்கை தளர்த்தும் அரசு!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (11:39 IST)
சீனாவில் கொரோனா பொதுமுடக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா அதிகமாக பரவும் பகுதிகளில் முழுமுடக்கத்தை அறிவித்த சீன அரசு, மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் எச்சரித்தது.

ஆனால் இந்த கொரோனா பொதுமுடக்க நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடந்த நிலையில் மக்கள் பலர் கொரோனா முகாம்களுக்கு தீ வைத்தனர். இதனால் போலீஸார், மக்களிடையே கைகலப்பு ஏற்பட்டு வன்முறை உண்டானது.

தொடர்ந்து போராட்டம், வன்முறை சம்பவங்கள் காரணமாக குவாங்ஷோ நகரில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற நகரங்களிலும் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments