Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண் கைதியை பாலியல் அடிமையாக்கிய பெண் சிறை அலுவலர்

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (14:16 IST)
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா நகரில் உள்ள பெண் சிறை அலுவலர் ஒருவர் சிறையில் தண்டனை கைதியாக இருக்கும் ஆண் கைதி ஒருவரை பாலியல் அடிமையாக்கி வைத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள சிறை ஒன்றில் வில்லியம் கார்டோபா என்ற 57 வயது நபர் ஒருவர் கொலை மற்றும் திருட்டு வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் இதே சிறையில் காவல் அதிகாரியாக பணிபுரியும் சில்வியா புல்டோ என்பவர் தனக்கு உதவியாளராக வில்லியமை நியமித்துள்ளார்.

இந்த நிலையில் தனது ஆசைக்கு அவ்வப்போது இணங்கினால் விரைவில் விடுதலை செய்ய ஏற்பாடு செய்வதாக வில்லியமிடம் கூறி அவ்வப்போது அவரை பாலியல் உறவுக்கு சில்வியா பயன்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னை பாலியல் அடிமைபோல் பெண் சிறை அதிகாரி சில்வியா பயன்படுத்துவதை புரிந்து கொண்ட வில்லியம், இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சில்வியா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததோடு, அவருக்கு நஷ்ட ஈடாக இந்திய மதிப்பில் ரூ.4 கோடி வழங்கவும் உத்தரவிட்டது.

சிறை அதிகாரி ஒருவரே சிறைக்கைதியை பாலியல் அடிமையாக்கிய விவகாரம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்