Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் காரணத்தினால் செவ்வாய்க்கு செல்ல முடியாது - நாசா தகவல்

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2017 (15:16 IST)
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்ய போதுமான பட்ஜெட் இல்லாததால் தற்போதைக்கு சாத்தியமில்லை என நாசா தெரிவித்துள்ளது.


 

 
சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்த படியக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் நாசா வெகு காலமாக ஆய்வு செய்து வருகிறது. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை எதிர்காலத்தில் குடியேற்ற நாசா திட்டமிட்டுள்ளது.
 
அதன்படி பல சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற சாத்தியமில்லை என ஆய்வு பிரிவின் தலைவர் வில்லியம் ஜெர்ஸ்டன்மையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றம் செய்வது நாசாவின் முக்கிய கனவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மனிதர்களை செவ்வாயில் குடியேற்றம் செய்ய அதிக செலவு பிடிக்கும். தற்போதைய பட்ஜெட் கொண்டு இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது என்றார்.
 
இதனால் நாசாவின் திட்டமான 2030க்குள் மனிதர்களை செவ்வாயில் குடியேற்றம் செய்வது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளனர். 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments