Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமனை சூறையாடும் காலரா; பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரிப்பு

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (18:27 IST)
ஏமன் நாட்டில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது.

 
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு புரட்சிப் படையினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டமைப்பு படையினர் ஆதரவு அளித்து வருகின்றனர். உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சனா நகரில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் படுவேகமாக பரவத் தொடங்கியது. சனாவை கடந்து அருகாமையிலுள்ள அமானத் அல்-செமா மாகாணம், ஹோடெய்டா, டய்ஸ் மற்றும் ஏடென் நகரிலும் காலரா நோய் வேகமாக பரவியது. 
 
உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் முகாம்களில் தங்களியுள்ள புலம்பெயர்ந்த மக்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏமனில் சுமார் 10 லட்சம் மக்கள் கலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 76 லட்சம் மக்கள் காலரா பாதிப்புக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டில் வாழும் மொத்த மக்கள்தொகையான 2.6 கோடி மக்களில் 1.7 கோடி பேர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் போதிய ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments