Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுளே..என்னிடம் இப்படி விளையாடாதே : பாடகி சின்மயி உருக்கம்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (18:40 IST)
பாடகி சின்மயின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரின் பொருட்கள் கொள்ளை போன சம்பவம் நடைபெற்றுள்ளது.


 

 
பாடகி சின்மயி தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். 
 
இந்நிலையில், ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்து பொருட்களை யாரோ திருடி சென்றுவிட்டனர். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சின்மயி “என் கார் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த அனைத்து பொருட்களையும் திருடி சென்று விட்டார்கள். உடைந்த போன கண்ணாடிக்கு அருகில் தற்போது நின்று கொண்டிருக்கிறேன்” என ஒரு டிவிட்டில் பதிவு செய்துள்ளார்.
 
அடுத்த டிவிட்டில் “என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ளவே எனக்கு 5 நிமிடம் ஆனது. இதுபோல் நடப்பது இங்கு சாதாரணமான ஒன்று என போலீசார் கூறுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
 
மற்றொரு டிவிட்டில் “என்னுடைய பொருட்கள் எனக்கு திரும்ப கிடைக்கும் என நம்புகிறேன். இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. கடவுளே என்னுடன் இப்படி விளையாடாதே” என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமராவில், திருட்டில் ஈடுபட்ட நபரின் முகம் பதிவாகியுள்ளதாகவும், அதன் மூலம் விரைவில் போலீசார் அவரின் பொருளை மீட்டுத் தருவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments