Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை பிடித்த நபர்கள்

2வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை பிடித்த நபர்கள்
, வெள்ளி, 23 மே 2014 (17:40 IST)
சீனாவில் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை இருவர் பிடிப்பது போன்ற புகைப்படங்கள் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளது.
குவாண்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டை கடந்து சென்ற போது அவ்வீட்டின் ஜன்னல் கதவின் மீது குழந்தை ஏறுவதை ஒரு நபர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். எந்நேரமும்  குழந்தை நிலைதடுமாறி விழுந்துவிடும் என்பதால் இவர் அதனை பிடிக்க கவனமாக காத்திருந்தார்.
 
சிறிது நேரத்தில் வீட்டின் 2வது மாடியில் இருந்து  விழுந்த அக்குழந்தையை பிடிக்க மற்றொரு நபரும் உதவி புரிந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து சரியான நேரத்தில் குழந்தையை பிடித்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
 
இவர்கள் இருவரும் குழந்தையை பிடிப்பது போன்ற புகைப்படங்கள் சீன ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து பேசிய அவர்களில் ஒருவர், என் கவனமெல்லாம் குழந்தையை எப்படியாவது காப்பாற்றவேண்டும்  என்பதில் தான் இருந்தது என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil