Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேரை சுட்டுக்கொன்ற சீன பாதுகாப்பு படை

குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேரை சுட்டுக்கொன்ற சீன பாதுகாப்பு படை
, புதன், 18 நவம்பர் 2015 (19:24 IST)
சீனாவின் கிழக்குப்பகுதியில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேரை சீன பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


 
 
சீனாவின் சின்சியாங் மாகாணத்தின் கிழக்குப்பகுதியில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பொதுமக்களை சீன பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
 
சீனாவில் கடந்த 3 வருடங்களாக நிலக்கரி சுரங்கத்தில் தீவிரவாதிகளுடன் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 50 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஈடுபடுபவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சீனா சந்தேகப்படுகிறது
 
இந்நிலையில், தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியாக  சீன பாதுகாப்பு படை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேரை கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து தகவல் தெரிவிக்க சீனா அரசு மறுத்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil