Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரயிலில் முத்தமிடும் காதல் ஜோடி மீது கடும் நடவடிக்கை: சீன காவல்துறை எச்சரிக்கை

ரயிலில் முத்தமிடும் காதல் ஜோடி மீது கடும் நடவடிக்கை: சீன காவல்துறை எச்சரிக்கை
, புதன், 22 ஜூலை 2015 (01:50 IST)
சப்வே ரயில் நிலையங்களில் எல்லைதாண்டி முத்தமிடும் காதல் ஜோடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீன காவல்துறை அறிவித்துள்ளது.
 

 
சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியாவ்னிங் மாகாணம் ஷென்யாங்கில் உள்ள ஒரு சப்வே ரயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு காதல் ஜோடி எல்லை மீறி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
குறிப்பாக, அருகில் சிலர் இருப்பதைக் கூட பாராமல், ஒருவரையொருவர் கட்டித்தழுவி, ஆசைதீர மீண்டும் மீண்டும் முத்தக்காட்சியை அரங்கேற்றம் செய்துள்ளனர்.
 
இதனால், கடுப்பான அந்த ஆசாமி, காதல் ஜோடியின் முத்தக்காட்சியை மொத்தமாக  அப்படியே வீடியோ பதிவு செய்து சமுக வலைதளங்களில் பரவவிட்டு தனது கடுப்பை தீர்த்துக் கொண்டார்.
 
இந்த தகவல் அறிந்த ஷென்யாங் காவல்துறையினர், சப் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் எல்லை மீறும் காதல் ஜோடிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சப்வே ரயில் நிலையங்கள் போன்ற பொது இடத்தில் காதல் ஜோடி முத்தம் கொடுத்தது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இனி வரும் காலத்தில் இது போல அநாகரீகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil