Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலி

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2015 (10:04 IST)
சீனாவின் ஷாங்காய் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 35 பேர் பலியானார்கள். மேலும் 42 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 
சீனாவின் ஷாங்காய் பகுதியில், புராதன அரண்மனைகள் மற்றும் நேர்த்தியான கடைத் தெருக்களை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
 
2015 ஆவது புத்தாண்டையொட்டி, பயணிகளை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், புத்தாண்டு பிறப்பை கொண்டாட ஆயிரக்கணக்கானோர் ஓரிடத்தில் கூடியிருந்த போது, அங்கு சில விஷமிகள் கட்டடத்தின் ஜன்னலில் இருந்து போலி பண நோட்டுகளை வீசினர்.
 
அதனை எடுப்பதற்காக ஒரே இடத்தில் ஏராளமானோர் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாயினர், மேலும் சுமார் 48 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments