Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயற்கைக்கோள்களை அழிக்கும் லேசர் கருவி!? – பீதியை கிளப்பும் சீனா!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (15:39 IST)
எதிரி நாட்டு செயற்கைக் கோள்களை அழிக்கும் வகையில் சீனா ஒரு லேசர் அலை கருவியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியின் முன்னேற்றத்தால் தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்காகவும் உலக நாடுகள் பல்வேறு செயற்கை கோள்களை வானில் நிலைநிறுத்தி வருகின்றன. இந்நிலையில் செயல் இழக்கும் செயற்கைக் கோள்களை வானிலேயே அழிப்பதற்கு உலக நாடுகள் பல தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன.

புவி வட்டத்தில் தாழ்வாக சுற்றிவந்து கண்காணிக்கும் பிறநாட்டு உளவு செயற்கைக் கோள்களை வீழ்த்த ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கருவிகள் கண்டுபிடித்து வருகின்றன. இந்நிலையில் செயற்கைக்கோள்களை அழிக்க சீனா ரிலேடிவிஸ்டிக் கிளைஸ்டிரான் ஆம்பிளிபையர் என்ற மைக்ரோவேவ் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளதாக தைவான் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதைக் கொண்டு சீனாவால் விண்வெளியிலேயே எந்த செயற்கைக்கோளை வேண்டுமானாலும் செயலிழக்க செய்ய முடியும் என பேசிக் கொள்ளப்படுகிறது. சீனா ஒருவேளை அவ்வாறான கருவியை கண்டுபிடித்திருந்தால் அது உலக நாடுகளிடையே பிரச்சினையை கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments