Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்த்தக போர்: வரியை ரத்து செய்தது சீனா!

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (13:21 IST)
சீனா மற்றும் அமெரிக்கா இடையே இறக்குமதி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிக வரி விதிப்பு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. 
 
அமெரிக்கா சீனாவை எதிர்த்து வரும் நிலையில், சீனா அமஎரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், தனது அருகாமையில் உள்ள ஆசிய நாடுகளுடன் சீனா வர்த்தகத்தில் நல்லுறவை வளர்த்துக்கொள்ள விரும்புகிறது. 
 
எனவே, இதன் முதற்கட்ட முயற்சியாக இந்தியா, வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் சோயா பீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை ரத்து செய்துள்ளது. 
 
இதுவரை அமெரிக்காவிடம் இருந்து அதிகளவில் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்து வந்த சீனா இனி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கூடுதலாக சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதற்கு முன்னர் சோயா பீன்ஸ் மீது 3 சதவீதமும், சோயா பீன்ஸ் புண்ணாக்கு மீது 2 சதவீதமும் சீனா வரி விதித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ரத்து செய்யப்பட்ட வரி விதிப்பு ஜூலை முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments