Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல மணி நேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினில் சிக்கிய குழந்தை மீட்பு

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (12:32 IST)
சீனாவில் பல மணி நேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. குழந்தைகள் விளையாட்டு என்ற பெயரில் அடிக்கும் லூட்டி சில சமயம் பெற்றோர்களை தர்ம சங்கட சூழ்நிலையிக்கு ஆளாக்கிவிடுகிறது.
 
சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஷவ்ஷாங் நகரில் சிறுவர், சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டில் கலந்து கொண்ட இரண்டு வயது குழந்தை வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்து கொண்டது. 
 
சிறிது நேரம் கழித்து குழந்தை இல்லாததை உணர்ந்த பெற்றோர், குழந்தையை வீடு முழுவதும் தேடினர். அப்போது வாசிங் மெஷினில் இருந்து அழுகுரல் கேட்டது. பதற்றமடைந்து வாஷிங் மெஷினுள் பார்த்த போது குழந்தை வாஷிங் மெஷினுள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து குழந்தையை வாஷிங் மெஷினில் இருந்து எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
 
இதனையடுத்து போலீஸாரின் உதவியோடு பல மணிநேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments