Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிளின்டன் தாத்தா ஆனார் - மகள் செல்சியாவுக்குப் பெண் குழந்தை

கிளின்டன் தாத்தா ஆனார் - மகள் செல்சியாவுக்குப் பெண் குழந்தை
, சனி, 27 செப்டம்பர் 2014 (12:41 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் - முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரின் மகள் செல்சியா, பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதன் மூலம் கிளின்டன் தம்பதியினர், தாத்தா - பாட்டி ஆகியுள்ளனர்.
 
செல்சியா கிளின்டன், 2010ஆம் ஆண்டு மார்க் மெஸ்வின்ஸ்கி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தான் கர்ப்பமாக இருப்பதை 2014 ஏப்ரலில் அறிவித்தார்.
 
எங்கள் மகள் சார்லோட் கிளின்டன் மெஸ்வின்ஸ்கி பிறந்துள்ள இந்த நேரத்தில், கணவர் மார்க்கும் நானும் முழுமையான காதலுடனும் பிரமிப்புடனும் நன்றியுடனும் இருக்கிறோம் எனச் செல்சியா, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 
செல்சியா, ஸ்டான்போர்டு, கொலம்பியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்தவர். தன் பெற்றோருடன் இணைந்து, கிளின்டன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அவருடைய கணவர் மார்க், முதலீட்டு வங்கியாளராகப் பணி புரிகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil