Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீ விபத்தில் 41 பேர் பலி.. குவைத் விரையும் மத்திய அமைச்சர்..!

Siva
வியாழன், 13 ஜூன் 2024 (07:39 IST)
குவைத்தில் நடந்த தீ விபத்தில் நேற்று 41 பேர் பலியானதாகவும் இதில் பலர் இந்தியர்கள் என்று கூறப்பட்டதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் குவைத் விரைவதாகும் அங்கு மீட்பு பணியை அவர் பார்வையிட போவதாகவும் கூறப்படுகிறது.

குவைத்தில் உள்ள 9 6 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இந்தியர்கள் உட்பட 41 பேர் பலியாகினார். தூங்கிக் கொண்டிருக்கும் போது புகையை சுவாசித்ததால் இறந்ததாக கூறப்படும் நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணியை கவனித்து வந்த நிலையில் தற்போது மத்திய வெளியுறவுத்துறைக்கான இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் உடனே குவைத் கிளம்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

அவர் நேரில் சென்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments