Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா எல்லையை மேலும் ஒரு மாதத்திற்கு மூடிய கனடா: அதிர்ச்சியில் மக்கள்

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (08:58 IST)
அமெரிக்கா எல்லையை மேலும் ஒரு மாதத்திற்கு மூடிய கனடா
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வந்த போதிலும் அமெரிக்காவில் இந்த வைரசினால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகிலேயே கொரோனாவால் அதிகமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமெரிக்காவின் அண்டை நாடாக இருந்தபோதிலும் கனடாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இல்லை.  கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,383 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,470 ஆகவும் உள்ளது என்பதும் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் கனடாவில் கொரோனா பெருமளவு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான எல்லையை சமீபத்தில் மூடிய கனடா, தற்போது மேலும் ஒரு மாதத்திற்கு எல்லையை மூடி வைக்க உத்தரவிட்டு இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து வரும் அமெரிக்கர்களால் கனடா நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கையை கனடா அரசு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கனடா அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலமும் மக்களின் பூரண ஒத்துழைப்பின் மூலமும் கொரோனா வைரஸ் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments