Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் பேருந்து விபத்து.! பாகிஸ்தான் யாத்ரீகர்கள் 35 பேர் பலி..!!

Senthil Velan
புதன், 21 ஆகஸ்ட் 2024 (13:38 IST)
ஈரானில் பேருந்து கவிழ்ந்த விபத்தில், பாகிஸ்தான் யாத்ரீகர்கள் 35-பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
பாகிஸ்தானில் இருந்து ஈராக்கிற்கு, 50க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பேருந்தில்  சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்திய ஈரானின் யாஸ்த் மாகாணத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 
இதில் 35 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் லர்கானா நகரைச் சேர்ந்தவர்கள். மேலும் பலத்த காயமடைந்த 18 பேர்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ALSO READ: 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு.! "தொழில் வளர்ந்தால், மாநிலமும் வளரும்" - முதல்வர் ஸ்டாலின்..!!
 
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவு துறை அமைச்சருமான இஷாக் தார்  இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடலை, பாகிஸ்தானுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments