Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோர்களை கொன்று உடல் உறுப்புகளை சமைத்து தின்ற கொடூர மனிதன்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2015 (10:22 IST)
பெற்றோர்களை கொன்று அவர்களின் உடல் உறுப்புகளை சமைத்து தின்ற கொடூர மனிதனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஹென்றி சாவ் (31) என்ற வாலிபர், ஹாங்காங்கில் வசித்து வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு ஹென்றி சாவி-இன் பெற்றோர்கள் திடீரென காணாமல் போயுள்ளனர். சில நாட்கள் கழித்து, அவர்களது துண்டிக்கப்பட்ட தலைகள் மட்டும், வீட்டின் குளிர்பதனப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டன.
 

 
அப்போது ஹென்றி சாவ்விடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளானர். விசாரணையில், தன்னுடைய பெற்றோர்களையே கொன்று சமைத்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர் இருவரையும் கொன்று விட்டு, பிறகு, உடல் உறுப்புகள் மீது உப்பு தடவி சமைத்துள்ளார்.
 
இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் மீது நீதிமன்றம் இரட்டைக் கொலை செய்த குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments