Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்களை மறந்தது தப்புதான்.. மன்னிச்சிடுங்க! – மன்னிப்பு கோரிய பிரிட்டன்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (11:38 IST)
முதல் உலக போரில் பிரிட்டனுக்காக போரிட்டு இறந்த வீரர்களை இன ரீதியாக ஒதுக்கியதற்காக பிரிட்டன் மன்னிப்பு கோரியுள்ளது.

முதல் உலகப் போர் நடைபெற்ற 1914-18 காலக்கட்டத்தில் இந்தியா பிரிட்டன் ஆளுகைக்குட்பட்டு இருந்த நிலையில் இந்தியாவிலிருந்து சுமார் 14 லட்சம் வீரர்கள் பிரிட்டன் ராணுவத்திற்காக முதல் உலகப்போரில் போரிட்டனர். இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ஆனால் அவ்வாறாக இறந்த இந்திய வீரர்களுக்கு பிரிட்டன் எந்த அங்கீகாரமும் அளிக்காததோடு, வரலாற்றிலும் தொடர்ந்து அவர்களது பங்களிப்பை குறிப்பிடாமலே இருந்து வந்தது. இது இனரீதியான பாகுபாடு என பலர் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது பிரிட்டன் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் சட்டப்பேரவையில் பேசியுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் “இந்திய வீரர்கள் நினைவு கூரப்படுவதில் இனரீதியான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. எனவே பிரிட்டன் அரசு சார்பாக நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments