Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமண நாள் போட்டோ ஷூட்டின் போது பெண்ணிற்கு நடந்த விபரீதம் [வீடியோ]

திருமண நாள் போட்டோ ஷூட்டின் போது பெண்ணிற்கு நடந்த விபரீதம் [வீடியோ]
, செவ்வாய், 25 அக்டோபர் 2016 (14:35 IST)
புதிதாக திருமணமான தம்பதிகள் முதல் நாள் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது எதிர்பாராத விதமாக தடுப்புக் கம்பியில் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 
சீன நாட்டைச் சேர்ந்த காதலர்கள் குறித்த நாளில் திருமணம் முடித்துள்ளனர். பிறகு, தம்பதிகள் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மணப்பெண் 4 அடி உயரமுள்ள இரும்பு பாலத்தில் மேல்புறமாக ஏறி நடந்துள்ளார்.
 
மணப்பெண்ணிற்கு உதவியாக அவருடைய கணவர் அவரது கரங்களை பற்றி தாங்கியபடி வந்தார். இதை ஒருவர் கேமராவில் படமெடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பெண் தடுப்புக் கம்பியின் மேல் தவறி விழுந்தார்.
 
இதனைக் கண்டதும் அவரது கணவர் உட்பட சுற்றி இருந்தவர்கள் அவரை பாதுகாப்பாக கீழிறக்கி விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்றது.

வீடியோ கீழே:
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி உடல்நலம் பாதிப்பு; யாரும் பார்க்க வர வேண்டாம்; திமுக தகவல்