Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவறையில் வெடிக்குண்டு! தெரியாம உட்கார்ந்தால்...?! - அமெரிக்காவை பீதியில் ஆழ்த்திய திடீர் மனிதன்!

Prasanth Karthick
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (13:17 IST)

அமெரிக்காவில் ஒரு கார் வாஷிங் நிறுவனத்தின் பொதுக் கழிவறைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட திடீர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர் ஒரு மர்ம ஆசாமி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரமும் அதனால் பொது இடங்களில் ஏற்படும் கொலை சம்பவங்களும் தொடர் அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கார் வாஷிங் நிறுவனம் ஒன்றின் பொதுக் கழிப்பறைகளில் வெடிக்குண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவில் வாஷ் டப் என்ற கார் வாஷிங் நிறுவனம் பல பகுதிகளில் கிளைகள் அமைத்து செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த நிறுவனத்தின் கிளைகளில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பொதுக் கழிப்பறைகளில் 3 இடங்களில் வெவ்வேறு நாட்களில் சிறிய அளவிலான வெடிக்குண்டுகள் வெடித்துள்ளன. இதனால் பெண் வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். உயிரிழப்பு அளவிற்கான பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை.

 

இதுகுறித்து அமெரிக்க போலீஸார் சம்பவம் நடந்த பகுதியில் நடத்திய ஆய்வில், அவை சிறிய அளவிலான வெடிப்பொருட்கள் அடங்கிய குண்டு என்பதும், அவை கழிவறையின் அமரும் இடத்தின் அடியில் வைக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. யாராவது வந்து கழிவறையில் அமரும்போது அந்த அழுத்தத்தால் அது வெடிப்பது போல செட் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

மேலும் விசாரணையில் அந்நிறுவனத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் வெடிக்குண்டு சம்பவங்கள் நடந்த கிளை வாஷிங் செண்டர்களுக்கு ஒரே ஆள் வெடி விபத்திற்கு முன்னதாக வந்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அல்டென் என்ற அந்நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் கழிவறையில் வெடி வைத்த திடீர் ஆசாமியால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments