Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு...

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (19:51 IST)
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அந்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் உடனடியாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் நாட்டிற்குச் சென்ற உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 10 பேர் வரை பலியானதாகக் கூறப்படுகிறது.

ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் பல்வேறு நாட்டு மக்கள் தங்களின் நாடுகளுக்குப் போக நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், விமான நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தபோது, குண்டு வெடித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் உதவியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

10 நாட்களாக பெரிய அளவில் ஏற்ற இறக்கமில்லாத தங்கம் விலை.. இனிமேல் என்ன ஆகும்?

சாலை போடவில்லை என கூறிய நபரை ‘போடா’ என கூறிய திமுக எம்.எல்.ஏ.. பெரும் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments