Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பல பெண்களைக் கடத்திய போகோ ஹரம் தீவிரவாதிகள்

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2014 (12:03 IST)
நைஜீரிய நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் பல பெண்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.

நைஜீரியாவை சேர்ந்த போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு அந்நாட்டில் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் அப்பாவி கிராம மக்களைக் கொல்வது, பெண்களைக் கடத்திச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னதாக ஒரு பள்ளி விடுதிக்குள் நுழைந்து சுமார் 300 மாணவிகளைக் கடத்தி சென்றனர். அவர்களின் நிலைமை என்ன ஆனது என்று எந்த தகவலும் புலப்படவில்லை.

இந்நிலையில் குலாக் என்ற நகரத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு அவர்கள் திடீர் தாக்குதலிலும் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பல பெண்களைக் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் திருமணமான பெண்களும் அடங்குவர்.

இவ்வாறு கடத்தப்படும் பெண்களை தீவிரவாதிகளுக்கு திருமணம் செய்து வைத்தல் போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே இவர்களையும் தீவிரவாதிகளுக்குத் திருமணம் செய்து வைக்க கடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments