Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொதிகலன் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

கொதிகலன் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்
, செவ்வாய், 28 அக்டோபர் 2014 (08:31 IST)
எத்தியோப்பியாவில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் கொதிகலன் வெடித்ததால் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
எத்தியோப்பியாவில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் இரு நாட்களுக்கு முன் கொதிகலன் வெடித்த விபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம், முத்துகிருஷ்ணன் ஆகிய இருவர் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். 
 
உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
எத்தியோப்பியா விபத்துக்கு காரணமான சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து பன்னாட்டு விதிகளின்படி இருவரின் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தருவதுடன், மத்திய, மாநில அரசுகளும் தங்களின் பங்காக தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் அந்த அறிப்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil