Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பைக்கு 313 பயணிகளோடு புறப்பட்ட விமானம் - என்ஜின் தீயால் தரையிறக்கப்பட்டது

மும்பைக்கு 313 பயணிகளோடு புறப்பட்ட விமானம் - என்ஜின் தீயால் தரையிறக்கப்பட்டது
, திங்கள், 14 ஜூலை 2014 (13:15 IST)
நியூ ஜெர்சியிலிருந்து மும்பைக்கு 313 பயணிகளோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் திடீரென தீ பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 
 
ஜுலை 13 ஆம் தேதி மாலை நியூ ஜெர்சியிலிருந்து மும்பைக்கு 313 பயணிகளோடு புறப்பட்ட ஏர் இந்தியா 144 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் இடது புற என்ஜினில் தீ பற்றியதாக விமானி தகவல் கொடுத்தார்.
 
இதையடுத்து, விமானத்தை பத்திரமாக தரையிறக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் நியூ ஜெர்சி விமானநிலையத்தை வந்தடைந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
 
விமானத்தில் ஏற்பட்ட பழுது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து விமானத்தில் பறவை மோதியதால் ஏற்பட்டதாக வெளிவந்த செய்தி தவறானது என விமான நிலைய உயர் அதிகாரி எரிகா டுமாஸ் தெரிவித்தார். 
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil