Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு…

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:45 IST)
ஆப்கானிஸ்தன் நாட்டில் உள்ள ஒரு மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமையின் போது, பயங்கர  சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இந்த மசூதியின் இமாம் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அரசிற்கும் தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்க அரசு தொடங்கியது. இதற்கு முக்கிய பங்காற்றி வந்த 4 இமாம்கள் மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments