பெட்ரோல் குண்டு வீசிய ஒருவரை கூட கைது செய்யவில்லை: அண்ணாமலை ஆவேசம்

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (09:51 IST)
திமுக எம்பி ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் பெட்ரோல் குண்டு வீசியவர்களில் ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பாஜகவினர் பலர்  அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். அவ்வாறு விமர்சனம் செய்து வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோவை உள்பட பல பகுதிகளில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களின் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி வருகின்றனர். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் பாஜக வினர் சுமார் 100 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஆனால் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல ஒத்த பைசா இல்ல.. இவ்ளோ சிசிடிவி கேமரா!. எழுதி வைத்துவிட்டு போன திருடன்!...

விஜய் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்கவே.. எனது கட்சியை தமாகா உடன் இணைக்கவுள்ளேன்: தமிழருவி மணியன்..!

ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பால் பரபரப்பு..!

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments