Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொலை வழக்கில் சாட்சி சொன்ன கிளி

கொலை வழக்கில் சாட்சி சொன்ன கிளி
, செவ்வாய், 28 ஜூன் 2016 (13:25 IST)
அமெரிக்காவில் கொலை வழக்கு ஒன்றில் கிளி ஒரு சாட்சியாக செயல்பட்டுள்ளது.


 

 
அமெரிக்காவின் மிசிகனை சேர்ந்த மார்டின் மற்றும் அவரது மனைவி கிளின்னாவுக்கும் இடையே நடைப்பெற்ற தகராறில் கிளின்னா, மார்டினை 5 தடவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
 
பின்னர் கிளின்னாவும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் துப்பாக்கி வெடிக்காத்தால் உயிர் தப்பினார். இச்சம்பவம் கடந்த ஆண்டு நடைப்பெற்றது. 
 
கொலையை நேரில் பார்த்த சாட்சி யாரும் இல்லை. அந்த தம்பதியினர் கிளி ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். அந்த கிளி தெளிவாக பேசும் திறன் கொண்டதாக இருந்த காரணத்தினால், அந்த கிளியை இக்கொலைக்கு சாட்சியாக பயன்படுத்த முடிவு செய்தனர்.
 
கிளியை வழக்கில் ஒரு சாட்சியாக ஏற்றுக்கொண்ட நீதிபதியிடம் அந்த கிளி கொலை நடந்த போது மார்டின் அவரது மனைவியிடம் என்னை சுடாத என்று கூறிய வார்த்தையை கூறியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதியின் பேஸ்புக் நண்பரிடம் விசாரணை: கொலையாளியை நெருங்கும் காவல் துறை