Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியரின் தலை துண்டித்து மரண தண்டனை விதித்த சவுதி அரேபியா

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2015 (15:35 IST)
முதலாளியை கொலை செய்ததற்கு தண்டனையாக சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவருக்கு தலை துண்டித்து மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
 
சவுதி அரேபியாவில் கற்பழிப்பு, சமய எதிர்ப்பு, போதைப் பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றங்களை புரிவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது.
 
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த சஜாதா அன்சாரி என்பவர் சவுதி அரேபியாவில் ஆடு மேய்க்கும் பணியினை செய்து வந்து உள்ளார். அன்சாரி, அவரது முதலாளியை அடித்து கொலை செய்துவிட்டு, கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
 
இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அன்சாரியின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளது.
 
சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு மட்டும் 60 பேருக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 87 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியா முதல் 5 இடங்களை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments