Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்துல தூங்குனா இது தான் கதி!!!

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (16:00 IST)
கனடாவில் விமானத்தில் தூங்கிய பெண்மனி, பயணம் முடிந்த பின்னும் எழுந்திருக்காததால் கடும் அவதிக்கு உள்ளானார்.

டிஃபானி ஆடம்ஸ் என்ற பெண்மனி கடந்த ஜூன் 9 ஆம் தேதி, கனடாவின் க்யூபெக் பகுதியிலிருந்து டொரண்டோவுக்கு, ஏர் கனடா விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

1.50 மணிநேர பயணத்தில் பாதியிலேயே உறங்கிவிட்டார். விமானம் தரையிறங்கிய பிறகு, தூங்கிய டிஃபானியை யாரும் கவனிக்கவில்லை.  

விமான சேவையில் இருந்தவர்கள் டிஃபானியை உள்ளேயே வைத்து பூட்டிவிட்டு, விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

சில மணி நேரம் கழித்து எழுந்த டிஃபானி, சுற்றி எங்கிலும் இருட்டாக இருப்பதை பார்த்து அதிர்ந்து போய், தனது மொபைல் ஃபோனிலுள்ள டார்ச் லைட்டை இயக்கி, விமானத்தின் மெயின் கதவிற்கு முன் வந்து கதவை திறந்துள்ளார்.

பின்பு வாசலில் நின்றுகொண்டு, சரக்கு வாகன ஓட்டி ஒருவரிடம் சிக்னல் காட்டி, அந்த ஓட்டுனரின் உதவியுடன் விமானத்திலிருந்து இறங்கியுள்ளார்.

இச்சம்பவத்தை குறித்து அவர் ஏர்-கனடாவின் வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இனிமேல் இது போன்ற கவனக்குறைவு நடக்காமல் பார்த்துகொள்வோம் என ஏர் கனடா நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments