Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர்தா அணிய தடை விதிக்க வேண்டும்.. இலங்கை நாடாளுமன்ற குழு

Arun Prasath
சனி, 22 பிப்ரவரி 2020 (20:02 IST)
இலங்கையில் ’பர்தா” அணிய தடை விதிக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் சர்ச்சுகள், ஹோட்டல்கள் ஆகியவற்றை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 250 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனை தொடர்ந்து, பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் தேச பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில், ”பர்தா அணிய உடனடியாக தடை விதிக்க வேண்டும், முகத்தை மறைக்கும் வகையில் யார் உடை அணிந்து இருந்தாலும், அவரது அடையாளம் தெரிவதற்காக, முக மறைப்பை நீக்குமாறு கேட்க போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும், மறைப்பை நீக்க சம்மதிக்காவிட்டால், அந்த நபரை வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.

மேலும், ”இன, மத அடிப்படையிலான பெயர்களை கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தடை வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments