Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட வங்கி ஊழியர்: 5 பேர் பரிதாப பலி..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (13:47 IST)
அமெரிக்காவில் வங்கி ஊழியர் ஒருவர் தனது சக ஊழியர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் உள்ள ஓல்ட் நேஷனல் என்ற வங்கியில் 25 வயது இளைஞர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென வங்கியில் நுழைந்த பின்பு சரமாரியாக சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டார். இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் பெண் ஊழியர் ஒருவர் சிகிச்சையின் பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூட்டை தனது சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்த வங்கி ஊழியரை காவல்துறையின் கைது செய்ய முற்படும்போது தன்னைத்தானே அவரது துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார். 
 
அவர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

விஜய் கூறியதை வரவேற்கிறேன்.. ஆனாலும் ஒரு சந்தேகம்.. திருமாவளவன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments