Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துர்கா பூஜை செலவை குறைத்து ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு உதவிய இந்துக்கள்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (14:58 IST)
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் துர்கா பூஜை செலவை குறைத்துக்கொண்டு மியான்மரில் இருந்து அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு நிதியுதவி செய்துள்ளனர்.  


 

 
இந்து பண்டிகைகளில் ஒன்றான துர்கா பூஜா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒன்று. ஆனால் ஓடிசா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய பகுதிகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். வங்க தேசத்திலும் இந்துக்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் அங்கும் துர்கா பூஜா சிறப்பாக கொண்டாடப்படும். 
 
மியான்மரில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் சுமார் 4,20,000 பேர் வங்க தேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். துர்கா பூஜை கொண்டாட சில கமிட்டிகள் உண்டு. அந்த கமிட்டிகள் அங்குள்ள இந்துகளிடம் பணம் வசூலித்து துர்கா பூஜையை சிறப்பாக நடத்துவது வழக்கம்.
 
தற்போது அந்த கமிட்டிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், வங்க தேசத்தில் வாழும் இந்துக்கள் மியான்மரில் நடக்கும் கலவரங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். வங்க தேசத்துக்கு லட்சக்கணக்கில் அகதிகள் வந்து குவிகின்றனர். அவர்களுக்கு உதவ இந்து சமுதாயம் விரும்புகிறது. 
 
அதன்படி துர்கா பூஜைகளுக்கான செலவுகளை மிகவும் குறைத்துக்கொண்டு அந்த பணத்தை அகதிகளுக்கு நிதியுதவி வழங்கலாம் என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

போரை நிறுத்தாவிட்டால் 100% வரி.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. புடின் பதில் என்ன?

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments