Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்காளதேசம்: பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 32 பேர் பலி

வங்காளதேசம்: பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 32 பேர் பலி
, செவ்வாய், 21 அக்டோபர் 2014 (11:22 IST)
வங்காளதேசத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வங்காளதேசத்தில் உள்ள நடோர் என்ற மாவட்டத்தில் டாக்கா–ராஜ்சாஹி நெடுஞ்சாலையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இவ்விபத்தால் பேருந்துகளில் பயணம் செய்த 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
 
காயம் அடைந்தவர்களை உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வங்காள தேசத்தில் பேருந்து விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாக உள்ளது. விபத்துக்குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil