Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டிருந்தா மட்டும் உள்ளே வரலாம்! – ஆஸ்திரேலியா அனுமதி!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (08:24 IST)
கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க உள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் உலக நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கான பயண கட்டுப்பாடுகளை மெல்ல தளர்த்தி வருகின்றன. ஆஸ்திரேலியாவில் முன்னதாக பயணிக்க சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்த நிலையில் தற்போது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் சிறப்பு அனுமதியின்றி பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர்ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “டிசம்பர் 1ம் தேதி முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவரும் தடையின்றி ஆஸ்திரேலியாவிற்குள் வரலாம். மாணவர்கள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரும் உரிய விசாவுடன், தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் போதுமானது” எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments