Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவுதமாலாவில் கடும் நிலச்சரிவு:25 பேர் பலி, 600 பேர் மாயம்

கவுதமாலாவில் கடும் நிலச்சரிவு:25 பேர் பலி, 600 பேர் மாயம்
, சனி, 3 அக்டோபர் 2015 (12:05 IST)
கவுதமாலாவில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலியாகி உள்ளனர். 600 க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.


 
 
கவுதமாலாவின் தலைநகரான கவுதமாலா நகரில் நேற்று முதல் கனமழை பெய்தது. இதனால் மலைப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் நிலச்சரிவின் காரணமாக சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன.
 
இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 25 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 600க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாவும் அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
 
மண்ணுக்கு அடியில் உயிருடன் புதையுண்டவர்களை மீட்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற மீட்பு பணியில் 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil