Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீரகத்தை பீதிக்கு உள்ளாக்கிய பறவை காய்ச்சல்; அரசு எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (08:37 IST)
உலகின் பல நாடுகளில் பறவை காய்ச்சல் நோய் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளிலிருந்து பறவைகள் இறக்குமதிக்கு அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

இந்தியா, ரஷ்யா, ஓமன், நெதர்லாந்து உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அரபு அமீரகத்திற்கு பறவைகள், இறைச்சிகள், முட்டைகள் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக ரஷ்யா, ஓமன், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பலபகுதிகளில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது.

இதனால் இந்த நாடுகளில் இருந்து பறவைகள் மற்றும் பறவைகள் சார்ந்த இறைச்சி, முட்டை இதர பொருட்களை தடை செய்வதாக அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அரபு நாட்டு சந்தைகளில் மேற்கண்ட நாடுகளில் இருந்து வந்த பறவைகள் விற்பனை செய்யபடாமல் இருப்பதை கண்காணிக்கவும், முறைகேடான இறக்குமதியை தடுக்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments