Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்துக் கோவில் மீது தாக்குதல்

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (19:55 IST)
வெளிநாடுகளில்  உள்ள இந்துக்கோயில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடந்து வரும் நிலையில், இன்று மீண்டும் ஆஸ்திரேலியாவிலுள்ள  இந்துகோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில், பிரதமர் ஆண்டனி அல்பனேசி தலைமையிலான ஆஸ்திரேலியா லேபர் பார்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைப் போன்று இங்கும் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 4  மாதங்களில் மட்டும் இங்குள்ள இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில், இதுபற்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்., வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசினார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்துக்கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணன் கோவிலில் உள்ள சுற்றுச்சுவரில், இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராவும் வாசகங்கள் எழுதிவைத்துள்ளனர்.

இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். இதுவரை 2 மாதங்களில் மட்டும் 4 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments