Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் உணவுக் கிடைக்காத குழந்தைகள் – 7.5 கோடி ரூபாய் நிதி அளித்த பிரபல நடிகை !

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (16:12 IST)
ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால் குழந்தைகள் உணவின்றித் தவிக்கும் சூழலைத் தவிர்க்கும் பொருட்டு 7.5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் சீனாவில் தீவிரமடைய தொடங்கிய கொரோனா வைரஸ் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. தென் கொரியா, ஜப்பான் என மெல்ல பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது உலகத்தில் 5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 23300 பேருக்கு மேல் இறந்துள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு உலகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் தினப்படி கூலிக்கு வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால் பாதிக்கப்பட்டு பசியால் வாடும் குழந்தைகளுக்காக 7.5 மோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். நோ கிட் ஹங்ரி என்கிற அமைப்பிடம் நிவாரண நிதியை அவர் வழங்கியுள்ளார். இந்த பணம் பசியால் வாடும் குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments