Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் துப்பாக்கியை தேடி ஓடும் பொதுமக்கள்: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (18:56 IST)
கொரோனாவால் துப்பாக்கியை தேடி ஓடும் பொதுமக்கள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் இந்த வைரஸ் எதிரொலியாக துப்பாக்கி வாங்க கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கொரோனா தாக்கம் காரணமாக கடைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. எனவே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் முயற்சியில் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று புதிதாக கிளம்பி இருப்பதாகவும் அந்த கும்பலிடமிருந்து பொருட்களையும் உயிர்களையும் காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கிகளை வாங்க பொதுமக்கள் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
அமெரிக்க மக்கள் கடந்த சில நாட்களில் மட்டும் ஏராளமான துப்பாக்கி வாங்க துப்பாக்கி கடை முன் வரிசையில் நிற்கின்றார்கள். கடந்த சில நாட்களில் மட்டும் அதிக அளவிலான துப்பாக்கிகளும் தோட்டாக்களும் விற்பனையாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
கொரோனாவில் இருந்து தப்பிப்பது ஒருபக்கம் சவாலான காரியம் என்றால் கொரோனாவுக்கு பயந்து வாங்கி வைத்த அத்தியாவசியமான பொருட்களை பாதுகாப்பது இன்னொருபக்கம் சவாலான காரியமாக இருப்பதாக அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments