Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் மிக அதிக அளவாக 21, 600 பேரை மீட்ட அமெரிக்கா!!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (10:43 IST)
கடந்த 24 மணி நேரத்தில், மிக அதிக அளவாக 21, 600 பேரை அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டு வெளியேற்றி இருக்கிறது. 
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கன் நாட்டு மக்கள் பலரும், வெளிநாட்டினரும் ஆப்கானிஸ்தானை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.
 
இந்நிலையில் அமெரிக்கா தனது விமானங்கள் மூலமாக அமெரிக்க மக்கள் மட்டுமல்லாது. ஆப்கன் மற்றும் பிற நாட்டு மக்களையும் மீட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில், மிக அதிக அளவாக 21, 600 பேரை அமெரிக்கா வெளியேற்றி இருக்கிறது.
 
ஆம், 37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12,700 பேரும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8,900 பேரும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவால் மீட்டு அழைத்துச் செல்லப்பட்டனர் என தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments