Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியாவிற்கு நெருக்கடி: ஒன்றிணைந்த மூன்று பெரிய நாடுகள்!!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (16:59 IST)
உலக நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்குபெறும் பிராந்திய பாதுகாப்பு கூட்டம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றது.




 
 
இந்த கூட்டத்தில் அனைத்து நாடுகளின் பாதுகாப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
 
கூட்டத்தின் முடிவில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.
 
அதில், வடகொரியா கையாண்டு வரும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட அனைத்து நாடுகளும் அந்நாட்டிற்கு அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும் என வலியுருத்தினர்.
 
மேலும், அணு ஆயுத சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது கூடுதல் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவும் ஐநா சபையில் நிறைவேற்றப்பட்ட தடைகளையும் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments